Latest Updates
-
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம்
ஆரோக்கியத்தைத் தரும் கார்ன் இட்லி
குழந்தைகளுக்கு சோளம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கியத்தைத் தரும் சோளத்தை எப்போதும் ஒரே போன்று வேக வைத்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு இட்லி செய்து கொடுங்கள். அதிலும் காலை வேளையில் இதனைக் கொண்டு இட்லி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு அந்த சோளத்தைக் கொண்டு செய்யப்படும் இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த கார்ன் இட்லியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குறிப்பாக இந்த கார்ன் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கார்ன்/சோளம் - 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
வறுத்த கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சோளம் மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, அத்துடன் கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, பின் அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் அந்த மாவைக் கொண்டு இட்லிகளாக சுட்டு எடுத்தால், கார்ன் இட்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications