Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆரோக்கியத்தைத் தரும் கார்ன் இட்லி
குழந்தைகளுக்கு சோளம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கியத்தைத் தரும் சோளத்தை எப்போதும் ஒரே போன்று வேக வைத்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு இட்லி செய்து கொடுங்கள். அதிலும் காலை வேளையில் இதனைக் கொண்டு இட்லி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு அந்த சோளத்தைக் கொண்டு செய்யப்படும் இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த கார்ன் இட்லியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குறிப்பாக இந்த கார்ன் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கார்ன்/சோளம் - 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
வறுத்த கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சோளம் மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, அத்துடன் கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, பின் அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இறுதியில் அந்த மாவைக் கொண்டு இட்லிகளாக சுட்டு எடுத்தால், கார்ன் இட்லி ரெடி!!!



Click it and Unblock the Notifications