Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை
கொத்தமல்லியில் எண்ணற்ற அளவில் கால்சியம், மக்னீசியம் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனை, அலர்ஜி, ஜலதோஷம் போன்றவற்றை குணமாக்கும் சக்தி உள்ளது. அதற்காக இதனை சட்னி மட்டும் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை.
கொத்தமல்லியை தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம். இங்கு கொத்தமல்லியைக் கொண்டு எப்படி தோசை சுடலாம் என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
புளுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.
அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு, நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத ்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி தோசை ரெடி!!!



Click it and Unblock the Notifications