Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை
கொத்தமல்லியில் எண்ணற்ற அளவில் கால்சியம், மக்னீசியம் இருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், செரிமான பிரச்சனை, அலர்ஜி, ஜலதோஷம் போன்றவற்றை குணமாக்கும் சக்தி உள்ளது. அதற்காக இதனை சட்னி மட்டும் தான் செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை.
கொத்தமல்லியை தோசையாகவும் சுட்டு சாப்பிடலாம். இங்கு கொத்தமல்லியைக் கொண்டு எப்படி தோசை சுடலாம் என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
புளுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.
அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு, நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத ்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி தோசை ரெடி!!!



Click it and Unblock the Notifications











