Latest Updates
-
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை
Chanakya Niti: சாணக்கியரின் இராஜதந்திரன் சாமானியராக இருந்த சந்திர குப்தரை, மௌரிய பேரரசின் சக்ரவர்த்தியாக மாற்றியது. சாணக்கியரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை, ஏனெனில் இன்றும் சாணக்கியரின் அறிவுரைகள் பிரபலமானவையாகவும், பலரால் பின்பற்றப்படுவதாகவும் உள்ளது. இந்த கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற முடியும். சாணக்கிய நீதி வெற்றி, தோல்வி மட்டுமின்றி வாழ்க்கையின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் விவாதிக்கிறது.

ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு இருக்கும்? இதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால், பலர் மிக இளம் வயதிலேயே இறந்துவிடுவதை நாம் காண்கிறோம். மனிதர்களின் ஆயுட்காலம் குறைவதற்கு பல காரணங்கள் என்ன? நோய், விபத்துகள் அல்லது தவறான பழக்கங்கள் போன்றவற்றால் ஒரு நபர் தனது ஆயுட்காலத்தின் பாதியிலேயே இறக்க நேரிடலாம். முற்பிறவி கர்மவினைகளின் விளைவுகளாலும் ஒருவர் இறக்கக்கூடும். ஆனால், பல நேரங்களில் ஒரு நபர் தனது சொந்தப் பண்புகளாலேயே தனது ஆயுளைக் குறைத்துக்கொள்கிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிற்றின்பம் மீதான அதிக ஈடுபாடு
அளவுக்கு மிஞ்சிய சிற்றின்பத்தின் மீதான நாட்டமானது ஒருவரின் உடலைச் சிதைத்து வலுவிழக்கச் செய்கிறது. இத்தகைய செயல்களில் ஈடுபடும்போது ஒருவரின் உயிர்ச்சக்தி வீணாகிறது. அவரது ஆன்மா இன்பம் சார்ந்த விருப்பு வெறுப்புகளால் நிரம்பி வழிகிறது. இன்பத்திற்காக அவர் திருடவோ, பொய் சொல்லவோ, சுயநலத்துடன் செயல்படவோ, ஏமாற்றவோ அல்லது கொலை செய்யவோ கூடத் துணியலாம். இதனால் அவரிடம் எதிர்மறை குணங்கள் அதிகரிக்கின்றன, இதனால் உடல் நோய்களின் இருப்பிடமாக மாறுகிறது. இது நிச்சயமாக ஆயுட்காலத்தைக் குறைக்கும்.
அளவுக்கு அதிகமான கர்வம்
அதிக கர்வம் கொண்ட ஒருவரின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். பிறரிடம் குறைகளையும் தன்னிடம் நற்பண்புகளையும் காண்பவர் எளிதில் கர்வத்திற்கு ஆளாகிறார். அத்தகைய நபர் தன்னை மற்றவர்களை விட வலிமையானவராகவும், புத்திசாலியாகவும் கருதுகிறார். அவர்கள் தங்களை எல்லையற்ற ஆற்றல் கொண்டவர்களாகக் கருதத் தொடங்குகிறார்கள். இந்தக் கர்வத்தினால் அவர்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள். அத்தகைய நபர் சீர்கெட்டுப் போவதற்கு அதிக காலம் எடுப்பதில்லை. எப்போதும் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒருவரை உலகம் ஒருபோதும் விரும்பாது.
அதிகமாகப் பேசுவது
எப்போதும் அர்த்தமற்ற அல்லது தேவையற்ற விஷயங்களைப் பேசுபவரின் ஆயுள் வேகமாக குறைகிறது. அவர் அளவுக்கு அதிகமாகப் பேசுவதிலேயே மும்முரமாக இருப்பார், அவரால் உண்மையைச் பேச முடிவதில்லை. அவர் பெரும்பாலும் தீய விளைவுகளைத் தரும் செயல்களிலேயே ஈடுபடுகிறார். அத்தகையவரின் ஆயுளும் புத்திசாலித்தனமும் படிப்படியாகக் குறையத் தொடங்குகின்றன. அவருடைய வார்த்தைகள் யாருடைய மனதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்
சமூகத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ, ஒருவரிடம் அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வு இருக்க வேண்டும். எதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவரின் ஆயுள் குறுகியதாகவே இருக்கும். உலகியல் இன்பங்கள் ஒருவரின் ஆயுளைக் குறைக்கின்றன. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர் அமைதியாக வாழ்வதுடன், அவரது ஆயுட்காலமும் அதிகரிக்கிறது. தன்னைப்பற்றி மட்டுமே சிந்திப்பவருக்குச் சமூகத்தில் மரியாதை கிடைப்பதில்லை.
அதிகமாக கோபப்படுபவர்கள்
கோபமே ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரியாகும். கோபத்தின் காரணமாக, ஒருவர் தான் செய்த செயல்களுக்காகப் பிற்காலத்தில் வருந்தும் நிலைக்குத் தள்ளப்படுவார். கோபத்தால் ஒருவர் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்வதோடு, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார். இதனால் ஒருவரின் ஆயுட்காலம் குறைகிறது. கோபத்தில் இருக்கும்போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை யாராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கோபப்படுபவர் எப்போதும் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சுருக்கமாக சொல்வதென்றால் கோபம் நரகத்திற்கான நுழைவாயிலாகும்.
நண்பருக்கு துரோகம் செய்பவர்கள்
நண்பருக்குத் துரோகம் செய்பவர் மிகவும் தாழ்ந்த மனிதராக வேதங்களால் வர்ணிக்கப்படுகிறார். உண்மையான நண்பர் ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் உடன் நிற்பார். ஆனால், நண்பர்களை ஏமாற்றுபவர்களால் ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியாது, மேலும் அவர்களின் ஆயுட்காலமும் குறைகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
