Latest Updates
-
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன?
குடைமிளகாய் சட்னி
பொதுவாக குடைமிளகாயை ப்ரைடு ரைஸ் உடன் சேர்த்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இங்கு அந்த குடைமிளகாய் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னியானது காலை வேளையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
சரி, இப்போது அந்த குடைமிளகாய் சட்னியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 2 பற்கள்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
புளி/மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 சிறு கொத்து
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, புளி/மாங்காய் தூள், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், குடைமிளகாய் சட்னி ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமானால், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
Image Courtesy: raajiskitchen



Click it and Unblock the Notifications