Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
சேனைக்கிழங்கு பொரியல்
கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது.
இங்கு அந்த சேனைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1 1/2 கப் (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - 1 சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை சுடுநீரில் 30 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, அத்துடன்
சேனைக்கிழங்கை சேர்த்து அடுப்பில் வைத்து, சேனைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கு, சாம்பார் பொடி, சோம்பு பொடி மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். எப்போது பச்சை வாசனையானது போகிறதோ, அப்போது அதனை இறக்கினால், சேனைக்கிழங்கு பொரியல் ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications











