Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
காலையில் நன்கு சுவையான மற்றும் எளிமையான முறையில் ஒரு கலவை சாதம் செய்ய வேண்டுமெனில், அதற்கு பட்டாணி புலாவ் சரியானதாக இருக்கும். மேலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை, பேச்சுலர்கள் கூட செய்யலாம். அந்த வகையில் இதன் செய்முறை மிகவும் ஈஸியானது.
சரி, இப்போது அந்த பட்டாணி புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, சாதம் மற்றும் பட்டாணி போட்டு கலந்து, உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமெனில் அரைக்கும் போது பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்க்காமல், அவற்றை நேரடியாக எண்ணெயில் போட்டும் தாளித்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











