Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
பஞ்சாபி ரெசிபி: தம் ஆலு அம்ரித்சரி
இந்தியாவில் தம் ஆலு/உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. இந்த தம் ஆலுவை பலவாறு இந்தியாவில் சமைப்பார்கள். அந்த வகையில் பஞ்சாபில் உள்ள அம்ரித்சரி என்னும் இடத்தில், இந்த தம் ஆலு குழம்பை வித்தியாசமாக சமைப்பார்கள்.
இப்போது அந்த பஞ்சாபி ரெசிபியான தம் ஆலு அம்ரித்சரி குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை உப்பு தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, உப்பு, சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பஞ்சாபி ரெசிபியான தம் ஆலு அம்ரித்சரி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சாதம் அல்லது பூரியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications