Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுவையான... புதினா சட்னி
புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமான பிரச்சனையை சரிசெய்யவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற என பலவாறு உதவியாக உள்ளன. எனவே இத்தகைய புதினாவை டீ போட்டு குடிப்பதை விட, அதனை சட்னி போல் செய்து, விருப்பான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இப்போது அந்த புதினா சட்னியின் செய்முறையோடு, அதனை எதனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து செய்து சாப்பிடலாமா!!!
தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 4
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 சிறிய உருண்டை
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புதினாவை நீரில் அலசி, நீரில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பருப்பானது பொன்னிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும்.
பின் அத்துடன், புதினா மற்றும் புளி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான புதினா சட்னி ரெடி!!! இந்த சட்னியை பலவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம். அது எவை என்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த புதினா சட்னியை விருப்பத்திற்கு ஏற்றவாறு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

சாதம்
மதிய வேளையில் சாதத்திற்கு சாம்பார், குழம்பு என்று சாப்பிட்டு போர் அடித்தால், புதினா சட்னியை செய்து, அதனை சாதத்துடன் சாப்பிடலாம்.

தோசை
தோசைக்கு புதினா சட்னி செய்து சாப்பிட்டாலும், அருமையாக இருக்கும்.

இட்லி
பெரும்பாலானோருக்கு இட்லிக்கு இரண்டு மூன்று சட்னிகள் இருந்தால் தான் பிடிக்கும். எனவே அந்த சட்னிகளில் ஒன்றாக புதினா சட்னியையும் செய்து சாப்பிடலாம்.

வடை
காலை அல்லது மாலை வேளையில் செய்யும் வடைக்கும் புதினா சட்னியை தொட்டு சாப்பிடலாம்.

பிரட்
சாண்ட்விச் செய்யும் போது. புதினா சட்னியையும் அத்துடன் சேர்த்து செய்து சாப்பிட்டால், சாண்ட்விச்சின் சுவை சூப்பராக இருக்கும்.

சமோசா
சமோசாவிற்கு தக்காளி சாஸ் மட்டும் தொட்டு சாப்பிடாமல், புதினா சட்னியில் தொட்டு சாப்பிட்டால், சமோசாவானது மிகவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications