Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
தயிர் குருமா
கோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய தயிரை மோராக செய்வது மட்டுமின்றி, தயிர் குருமா போன்றும் செய்யலாம்.
குறிப்பாக அந்த தயிர் குருமாவில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். சரி, இப்போது தயிர் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் சீவி, நறுக்கியது)
பச்சை பீன்ஸ் - 1/4 கிலோ (நறுக்கியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
புளிக்காத தயிர் - 1 1/2 கப்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
முந்திரிப் பருப்பு - 10
கசகசா - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 7
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்தப் பொருட்களை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தயிரை கடைந்து ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் கரம மசாலா சேர்த்து, குருமா சற்று லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











