Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
தயிர் குருமா
கோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய தயிரை மோராக செய்வது மட்டுமின்றி, தயிர் குருமா போன்றும் செய்யலாம்.
குறிப்பாக அந்த தயிர் குருமாவில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். சரி, இப்போது தயிர் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் சீவி, நறுக்கியது)
பச்சை பீன்ஸ் - 1/4 கிலோ (நறுக்கியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
புளிக்காத தயிர் - 1 1/2 கப்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
முந்திரிப் பருப்பு - 10
கசகசா - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 7
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்தப் பொருட்களை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தயிரை கடைந்து ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் கரம மசாலா சேர்த்து, குருமா சற்று லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications