Latest Updates
-
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 16 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்களாம் -
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்தும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்... -
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! -
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும் -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்.. -
உன்னாவ் வழக்கு: அதிகாரத்தின் பிடியில் சிக்கிய நீதி! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி - பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!
தயிர் குருமா
கோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய தயிரை மோராக செய்வது மட்டுமின்றி, தயிர் குருமா போன்றும் செய்யலாம்.
குறிப்பாக அந்த தயிர் குருமாவில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். சரி, இப்போது தயிர் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் சீவி, நறுக்கியது)
பச்சை பீன்ஸ் - 1/4 கிலோ (நறுக்கியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
புளிக்காத தயிர் - 1 1/2 கப்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
முந்திரிப் பருப்பு - 10
கசகசா - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 7
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்தப் பொருட்களை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தயிரை கடைந்து ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் கரம மசாலா சேர்த்து, குருமா சற்று லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications