Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
அவல் உப்புமா
காலை வேளையில் 15 நிமிடங்களில் காலை உணவு செய்ய வேண்டுமெனில், அதற்கு அவல் உப்புமா சரியானதாக இருக்கும். ஆம், அவல் உப்புமா செய்வது மிகவும் எளிது மற்றும் ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இது மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். நம்பவில்லையெனில், செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் அவலை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக ஒரு பொளலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அவலை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
இறுதியில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 3-5 நிமிடம் பிரட்டி விட்டு, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, தயிருடன் சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications