Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
அசாரி கோபி ரெசிபி
காலிஃப்ளவர் கொண்டு ஏதேனும் சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? எப்போதும் கோபி மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால், சற்று வித்தியாசமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அசாரி கோபி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ரெசிபியாகவும் இருக்கும்.
அதிலும் இந்த ரெசிபியானது பண்டிகை காலங்களில் வீட்டில் இருக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த அசாரி கோபி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 3 கப்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அசாரி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
அசாரி மசாலாவிற்கு...
வரமிளகாய் - 16-18
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காய விதை/வெங்காய விழுது - 3 டீஸ்பூன்
சோம்பு - 6 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 6 டீஸ்பூன்
உப்பு - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 3 டீஸ்பூன்
செய்முறை:
அசாரி மசாலா செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, வெங்காய விதை, சோம்பு, கடுகு, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், 2 மாதம் வரை பயன்படுத்தலாம்.
அசாரி கோபி செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னறிமாக வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாறு மற்றும் தயிர் ஊற்றி சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் அசாரி மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
பிறகு வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின் எலுமிச்சை சாறு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அசாரி கோபி ரெடி!!!



Click it and Unblock the Notifications











