Latest Updates
-
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை!
சில்லி பிரட் உப்புமா
எப்போதும் இட்லி, தோசை செய்வதால் குழந்தைகள் காலை உணவை சாப்பிட மறுக்கிறார்களா? குழந்தைகளுக்கு பிடித்தவாறு காலை உணவை செய்ய வேண்டுமா? அப்படியானால் வாரம் ஒருமுறை சில்லி பிரட் உப்புமா செய்து கொடுங்கள். இது ஒரு சைனீஸ் ரெசிபி. இருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இங்கு அந்த சில்லி பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து உங்கள் குழந்தைக்கு செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:
பிரட் - 6 துண்டுகள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
வரமிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, சர்க்கரை, உப்பு, அஜினமோட்டோ சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பிரட் துண்டுகளை சேர்த்து பிரட்டி, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், சில்லி பிரட் உப்புமா ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications