Just In
- 37 min ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 5 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செட்டிநாடு வத்த குழம்பு
செட்டிநாடு ரெசிபிக்களை தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். ஆம், கடைகளில் சென்று செட்டிநாடு ரெசிபிக்களை ஆர்டர் செய்தால், கொஞ்சமாக தான் இருக்கும். ஆனால் அதையே எப்படி சமைப்பதென்று தெரிந்து கொண்டால், வீட்டிலேயே அற்புதமாக சமைத்து, நிறைய சாப்பிடலாம் அல்லவா!
இங்கு அந்த செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான வத்த குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்...
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்
வத்தல்
-
5
டீஸ்பூன்
வெங்காயம்
-
3
(நறுக்கியது)
பூண்டு
-
10
பற்கள்
தக்காளி
-
1
(நறுக்கியது)
சாம்பார்
தூள்
-
3
டீஸ்பூன்
புளி
-
1
எலுமிச்சை
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
3
டீஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
வெந்தயம்
-
1
டீஸ்பூன்
சோம்பு
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
3
கறிவேப்பிலை
-
சிறிது
கொத்தமல்லி
-
சிறிது
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால், செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!
Image Courtesy: bharatmoms