Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
செட்டிநாடு மசாலா குழம்பு
செட்டிநாடு ரெசிபிக்களில் மசாலா குழம்பும் பிரபலமானது. குறிப்பாக இந்த மசாலா குழம்பானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும். மேலும் இந்த மசாலா குழம்பில் விருப்பமான எந்த ஒரு காய்கறியையும் பயன்படுத்தலாம். இங்கு முள்ளங்கி பயன்படுத்தி எப்படி செட்டிநாடு மசாலா குழம்பு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
சரி, இப்போது அந்த செட்டிநாடு மசாலா குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!‘

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1/4 கப்
சோம்பு 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 1
பட்டை - 1/4 இன்ச்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1 கையளவு
பூண்டு - 4-5 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய், சோம்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு மசாலா குழம்பு ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications