Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சன்னா மத்ரா: ஹிமாச்சல பிரதேச ரெசிபி
உலகிலேயே இந்திய உணவுகளின் சுவைக்கு இணையாக வேறு எதுவும் வர முடியாது. அத்தகைய இந்திய உணவுகளில் நிறைய உள்ளன. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமான சன்னா மத்ரா என்னும் கிரேவியின் செய்முறையைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.
இந்த கிரேவியானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த சன்னா மத்ரா என்னும் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 3 கப்
தயிர் - 2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கிராம்பு - 2-3
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உலர் பழங்கள் - சிறிது
நெய் - 4 டேபிள் ஸ்பூள்
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் இரவில் படுக்கும் போதே அல்லது குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, குக்ரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, கொண்டைக்கடலையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
அடுத்து தயிரில் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, வாணலியில் ஊற்றி, தீயை குறைத்து, லேசாக கொதிக்க விட வேண்டும்.
கிரேவியானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கொண்டைக்கடலை, உப்பு மற்றும் உலர் பழங்களை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சன்னா மத்ரா ரெடி!!!



Click it and Unblock the Notifications











