Latest Updates
-
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க
சன்னா மத்ரா: ஹிமாச்சல பிரதேச ரெசிபி
உலகிலேயே இந்திய உணவுகளின் சுவைக்கு இணையாக வேறு எதுவும் வர முடியாது. அத்தகைய இந்திய உணவுகளில் நிறைய உள்ளன. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமான சன்னா மத்ரா என்னும் கிரேவியின் செய்முறையைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.
இந்த கிரேவியானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த சன்னா மத்ரா என்னும் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 3 கப்
தயிர் - 2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கிராம்பு - 2-3
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உலர் பழங்கள் - சிறிது
நெய் - 4 டேபிள் ஸ்பூள்
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் இரவில் படுக்கும் போதே அல்லது குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, குக்ரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, கொண்டைக்கடலையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
அடுத்து தயிரில் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, வாணலியில் ஊற்றி, தீயை குறைத்து, லேசாக கொதிக்க விட வேண்டும்.
கிரேவியானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கொண்டைக்கடலை, உப்பு மற்றும் உலர் பழங்களை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சன்னா மத்ரா ரெடி!!!



Click it and Unblock the Notifications