Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
கத்திரிக்காய் மசாலா
கத்திரிக்காய் சிலருக்கு ரொம்ப பிடிக்கும். அத்தகையவர்கள் கத்திரிக்காயை சாம்பார், வறுவல் என்று தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் இங்கு கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதனை செய்து மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
சரி, இப்போது கத்திரிக்காய் மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1 இன்ச்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
தேங்காய் - 1 கப்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் கத்திரிக்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
கத்திரிக்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கத்திரிக்காய் மசாலா ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications