Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பேச்சுர்களுக்கான... பேல் பூரி சாண்ட்விச்
பொதுவாக காலையில் பேச்சுலர்கள் எதுவும் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் காலையில் எழுந்ததும் வியர்வை வழிய சமையலறையில் யார் சமைப்பது என்பதால் தான். அதனால் தான் இன்றைய பேச்சுலர்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு மிகவும் முக்கியமான காலை உணவை உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை போக்கலாம்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பேச்சுலர்கள் காலையில் செய்து சாப்பிடக்கூடியவாறான ஒரு அருமையான சாண்ட்விச் ரெசிபியைக் கொடுத்துள்ளது. அதற்கு பெயர் பேல் பூரி சாண்ட்விச். இந்த சாண்ட்விச்சை பத்தே நிமிடங்களில் செய்துவிடலாம். சரி, இப்போது அந்த பேல் பூரி சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - தேவையான அளவு
அரிசி பொரி - 100 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
புதினா சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
மிக்ஸர்/ஓமப்பொடி - தேவையான அளவு
புதினா சட்னிக்கு...
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
முதலில் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் புதினா சட்னியை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள பேல் பூரியை சிறிது வைத்து, அதற்கு மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து பரிமாறினால், பேல் பூரி சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications