Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
ஆலு மட்டர் பரோட்டா

தேவையான பொருட்கள்:
கோதுமை/மைதா மாவு - 2 கப்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது)
மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு (துருவியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை அல்லது மைதா மாவு, தயிர், வெதுவெதுப்பான நீர் மற்றும உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணிநேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றோரு பாத்திரத்தில் உருளைக்கிழகை மசித்துக் கொண்டு, அதோடு பச்சை பட்டாணி, மாங்காய் பொடி, இஞ்சி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், ஓமம் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதை எடுத்து, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மடித்து, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள மாவை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து, எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆலு மட்டர் பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications











