Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
வரகரிசியை ஒருடைம் இப்படி உப்புமா செஞ்சு சாப்பிடுங்க.. ருசியாவும் இருக்கும்.. சத்தானதும் கூட...
Varagu Arisi Upma Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறுதானியங்களை சமைத்து சாப்பிடுங்கள். சிறு தானியங்களில் வரகரிசி, திணை என்று பல உள்ளன. இவற்றைக் கொண்டு பெரும்பாலானோர் கஞ்சியை தான் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இந்த வரகரிசியைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்து சாப்பிடும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இந்த வரகரிசி உப்புமா உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போருக்கு ஏற்ற சிறந்த காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு வரகரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 1 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த அரிசியில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து,
வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து, உப்பு தூவி
5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான
தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான வரகரிசி உப்புமா
தயார்.



Click it and Unblock the Notifications