Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
வரகரிசியை ஒருடைம் இப்படி உப்புமா செஞ்சு சாப்பிடுங்க.. ருசியாவும் இருக்கும்.. சத்தானதும் கூட...
Varagu Arisi Upma Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறுதானியங்களை சமைத்து சாப்பிடுங்கள். சிறு தானியங்களில் வரகரிசி, திணை என்று பல உள்ளன. இவற்றைக் கொண்டு பெரும்பாலானோர் கஞ்சியை தான் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இந்த வரகரிசியைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்து சாப்பிடும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இந்த வரகரிசி உப்புமா உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போருக்கு ஏற்ற சிறந்த காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு வரகரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 1 கப்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
* முதலில் வரகரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த அரிசியில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து,
வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து, உப்பு தூவி
5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, மிதமான
தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான வரகரிசி உப்புமா
தயார்.



Click it and Unblock the Notifications









