Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சத்தான... வல்லாரை கீரை சாம்பார்
பொதுவாக வல்லாரை கீரையைக் கொண்டு துவையல் தான் செய்வார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் கூட செய்யலாம். இந்த கீரை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
கீரைகளில் வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இது நினைவாற்றலை அதிகரிக்கும் பண்புகளை அதிகம் கொண்டுள்ளன. பொதுவாக வல்லாரை கீரையைக் கொண்டு துவையல் தான் செய்வார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் கூட செய்யலாம். இந்த கீரை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். எப்போதும் காய்கறியைப் போட்டு சாம்பார் செய்து அழுத்திருந்தால், இந்த கீரை கொண்டு சாம்பார் செய்யுங்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இம்மாதிரியான கீரை சாம்பார் அடிக்கடி செய்வது, குழந்தைகளுக்கு நல்லது.

சரி, உங்களுக்கு வல்லாரை கீரை சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வல்லாரை கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்து நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* வல்லாரை கீரை - 3 கப் (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
பருப்பு செய்வதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து, நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஊற வைத்து, பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து, சிறிது உப்பு தூவி ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கீரையை சேர்த்து வதக்கி, நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், புளிச்சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* அடுத்து, அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வல்லாரை கீரை சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











