Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ!
தோசைக்கு இந்த உடுப்பி கார சட்னி செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Udupi Kara Chutney Recipe in Tamil: கிட்டத்தட்ட அனைத்து தென்னிந்திய வீடுகளிலும் காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி அல்லது தோசைதான். இதனால் ஒவ்வொரு நாளும் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய வேலையாக மாறுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது வடக்கு கர்நாடகாவில் பிரபலமான கெம்பு சட்னி என்று அழைக்கப்படும் ஒருவகை தக்காளி சட்னியைத்தான். முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இந்த சட்னி முழுக்க முழுக்க காரமான உணவுகளை விரும்புபவர்களுக்கு மட்டுமே.

இந்த காரமான சிவப்பு நிற சட்னி உடுப்பி பகுதிகளில் அக்கி ரொட்டிக்கு சைடிஷாக பரிமாறப்படும். ஆனால் நாம் இதை நம்முடைய இட்லி, தோசைக்கும் சைடிஷாக வைத்து சாப்பிடலாம். இந்த சட்னி அரைத்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த பதிவில் காரமான கெம்பு சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 10 வர மிளகாய்
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 ஸ்பூன் வெல்லம்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- அரை ஸ்பூன் சீரகம்
- கொத்தமல்லி தண்டுடன் சிறிதளவு
- 5 பல் பூண்டு
- உப்பு தேவைக்கு ஏற்ப
- 1 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, 10 உலர்ந்த வர மிளகாயைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை மூடி வைத்து, அவை மென்மையாகும் வரை தனியாக வைக்கவும்.
- இதற்கிடையில், ஒரு வாணலியில் ½ டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, தோராயமாக நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- தீயை மிதமாக வைத்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வர மிளகாய், வறுத்த வெங்காயம், 5 பூண்டு பற்கள், கொத்தமல்லி இலைகள், சிறிய அளவு புளி, 2 ஸ்பூன் வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- இந்த கலவையை சிறிது கரடுமுரடாக அரைக்கவும், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் மென்மையாக அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, சூடானதும், ¼ தேக்கரண்டி கடுகு சேர்க்கவும். அவை வெடிக்கத் தொடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.
- உடனடியாக அதை சட்னியில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த காரமான கெம்பு சட்னியை இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். இந்த சட்னியை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்தால் 10 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications
