Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
துளசி இலை சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... ஆரோக்கியமும்,சுவையும் ஒண்ணா கிடைக்கும்...!
Tulsi Chutney Recipe in Tamil: இந்த பனிக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட துவங்கும். அதைக் கருத்தில் கொண்டு நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம். இந்த இந்த பொருட்களை பெரும்பாலும் நாம் சூப் அல்லது கஷாயமாக செய்து கொடுப்போம். அப்படி கொடுக்கும் போது குழந்தைகள் அதை நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
சளியை விரட்டும் உணவுகளை அவர்களுக்கே தெரியாமல் உணவில் கலந்து கொடுக்க மிகவும் சரியான வழி சட்னி தான். பெரும்பாலான வீடுகளில் இருக்கும் சளியை விரட்டும் பொருட்களில் முக்கியமானது துளசி இலை. எனவே துளசி இலையை சட்னியாக அரைத்துக் கொடுக்கும் போது குழந்தைகள் அதனை இட்லி அல்லது தோசை போன்றவற்றிலிருந்து வைத்து அவர்களுக்கே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள். இது அவர்களை சளியாக ஏற்படும் பாதிப்புகள் இருந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு ஆரோக்கிய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துளசி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துளசி இலைகள்
- 8 பல் பூண்டு
- 4 பச்சை மிளகாய்கள்
- 1 தக்காளி கழுவி
- 1 வெங்காயம் (சிறியது)
- 2 பாதாம் பருப்புகள்
- 1 தேக்கரண்டி தூள் உப்பு
செய்முறை:
- முதலில் 1 கப் துளசி இலைகளை எடுத்து சுத்தமான நீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு சுத்தமான மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் துளசி இலைகளை போடவேண்டும்.
- பின்னர், தோலுரிக்கப்பட்ட பூண்டை 8 முதல் 10 பற்களையும், இரு
துண்டுகளாக நறுக்கிய 4 பச்சை
மிளகாய்களையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.
- அதன் பிறகு மிக்சியில் 2 முதல் 4 துண்டுகளாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும்.
- அதனுடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயங்களை சேர்க்க வேண்டும்.
- பிறகு, அதில் ஊறவைத்த 2 பாதம் துண்டுகளையும் சேர்க்க வேண்டும்.
- இவைற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த விழுதினை பதம் சிறிது திப்பி திப்பியாக இருக்க வேண்டும்.
- அரைத்த விழுதினை ஒரு கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். பிறகு, தாளிப்பு கரண்டியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு கடுகு, உடைத்த உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்க வேண்டும்.
- சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications