Just In
- 1 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 21 min ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago
காவல்துறையினர் ஏன் காக்கி நிறத்தில் மட்டும் சீருடை அணிகிறார்கள் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு!
Don't Miss
- Sports
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை எதற்காக தடை.. பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!
- Finance
8 நிமிடங்களில் தேவையான சேவை.. கொரோனாவினால் தோன்றிய புதிய வணிகம்.. அசத்தும் கேரளா மாணவன்!
- Technology
அடேங்கப்பா.. ஹை-குவாலிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- News
6 வயசுதான்.. கதறித் துடித்த சிறுமி! வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் கைது! அதிர்ந்த சென்னை!
- Movies
ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!
- Automobiles
ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா? வேண்டாமா? இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க...
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
துவரம் பருப்பு உருண்டை
மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், காரமாகவும் ஏதாவது சாப்பிடத் தோன்றும். ஆனால் வழக்கமாக செய்யும் வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை செய்வதற்கு பதிலாக, கோஃப்தா என்னும் உருண்டையை செய்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். அதுவும் துவரம் பருப்பு உருண்டை செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு துவரம் பருப்பு உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே துவரம் பருப்பு உருண்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1 கப் (4 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு
* பட்டை - 1 இன்ச்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1/2 கப்
* கடலை மாவு - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் எண்ணெய் மற்றும் மாவுகளைத் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருமுறை அரைத்து, பாத்திரத்தில் உள்ள துவரம் பருப்புடன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பிறகு அதில் அரிசி மாவு மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், துவரம் பருப்பு கோஃப்தா/உருண்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi