Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சிம்பிளான மற்றும் சுவையான... தக்காளி சாம்பார்
உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் வெங்காயம், தக்காளி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே சுவையான தக்காளி சாம்பார் செய்யலாம்.
உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் வெங்காயம், தக்காளி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டே சுவையான தக்காளி சாம்பார் செய்யலாம். ஆம், இந்த தக்காளி சாம்பார் சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி தோசைக்கும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் சுலபமான செய்முறையைக் கொண்டிருக்கும். பேச்சுலர்களும் இந்த தக்காளி சாம்பாரை முயற்சி செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* தக்காளி - 2 (பெரியது)
* சின்ன வெங்காயம் - 10
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/4 கப்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* சாம்பார் பொடி - 2-3 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* நல்லெண்ணெய் - 1 அல்லது 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிழிந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு துவரம் பருப்பை நீரில் 2-3 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய துவரம் பருப்பை குக்கரில் போட்டு, அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, சின்ன வெங்காயத்தைப் போட்டு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, 1 1/4 கப் நீரை ஊற்றி கிளறி நன்கு கிளறி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 8-10 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். பின் மீண்டும் அந்த குக்கரை பருப்புடன் அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்துவிட்டு, பருப்புடன் புளிச்சாற்றினை ஊற்றி கிளற வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, குறைவான தீயில் 10-12 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சாம்பாருடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி சாம்பார் தயார்.
குறிப்பு:
* இந்த சாம்பாருடன் வேண்டுமானால் உங்களுக்கு பிடித்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* தாளிப்பதற்கு எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்தலாம்.
* துவரம் பருப்பு இல்லாவிட்டால், பாசிப்பருப்பை பயன்படுத்தியும் செய்யலாம்.
* வீட்டில் சாம்பார் தூள் இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் மல்லித் தூள், 1/4 டீஸ்பூன் சீரகத் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1/4-1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
