Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
தக்காளி வேர்க்கடலை சட்னி
உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/4 கப்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2
* சின்ன வெங்காயம் - 5
* தக்காளி - 2
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை 3-5 நிமிடம் வதக்கவும்.
* இப்போது அதில் புளி, வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications