Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தக்காளி வேர்க்கடலை சட்னி
உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் இட்லி, தோசை சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி வேர்க்கடலை சட்னி செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

கீழே தக்காளி வேர்க்கடலை சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/4 கப்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2
* சின்ன வெங்காயம் - 5
* தக்காளி - 2
* புளி - சிறு துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை மற்றும் வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை 3-5 நிமிடம் வதக்கவும்.
* இப்போது அதில் புளி, வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் வரமிளகாயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











