Latest Updates
-
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
தக்காளி சட்னி செய்யும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க.. சட்னி டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Tomato Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி ஏதாவது செய்ய நினைக்கிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு தக்காளியை சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இன்று தக்காளி சட்னி செய்யும் போது, அத்துடன் ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கொள்ளுங்கள்.
தக்காளி சட்னியின் சுவையே வேற லெவலில் இருக்கும். மேலும் இந்த ஸ்டைல் தக்காளி சட்னியை ஒருமுறை வீட்டில் செய்தால், அடிக்கடி செய்வீர்கள். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். செய்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 3 பல்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 50 கிராம்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நிறம் மாற
வதக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, சுவைகேற்ப உப்பு தூவி, ஒருமுறை கிளறி,
மூடி வைத்து 3-4 நிமிடம் தக்காளியை வேக வைக்க வேண்டும்.
* 4 நிமிடம் ஆனதும், மூடியை திறந்தால் தக்காளி நன்கு மென்மையாக
வெந்திருக்கும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் பொட்டுக்கடலையை
சேர்த்து கிளறி, குளிர வைக்க வேணடும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, நீர்
சேர்க்காமல் அப்படியே மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு,
தாளிப்பதற்கு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி
தயார்.
Image Courtesy: Spice Up The Curry



Click it and Unblock the Notifications