Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
2 தக்காளியும், கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்
Thakkali Kadalai Paruppu Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னியுடன் தக்காளி சட்னியை சேர்த்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் அனுபவமே தனி. காலைப்பொழுதை மகிழ்ச்சியாகத் தொடங்க இதுவே சிறந்த வழி.

தக்காளி சட்னியை பொதுவாக ஒரே மாதிரிதான் அரைப்போம். தக்காளி சட்னியின் பொதுவான மூலப்பொருள் தக்காளியாக இருந்தாலும், அதனுடன் சேர்க்கும் மற்ற பொருட்கள்தான் அதற்கு சுவையைக் கொடுக்கிறது. தக்காளி சட்னி அரைக்கும் போது அதனுடன் சில குறிப்பிட்ட பொருளை சேர்த்து அரைத்தால் அதன் சுவை வித்தியாசமாகவும், தனித்துவமானதாகவும் இருக்கும். அதில் முக்கியமான ஒரு பொருள்தான் கடலைப்பருப்பு.
உங்களுக்கு தக்காளி கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடலைப்பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - 1
- கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் வர மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- கடலைப்பருப்பு லேசான பொன்னிறமாக மாறி, நறுமணம் வரும் வரை இவ்வாறு வறுக்க வேண்டும். பின்னர் அவற்றை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள எண்ணெயில் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது தக்காளியைச் சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் இதையும் தனியாக வைத்து ஆற வைக்கவும்.
- முதலில் வறுத்த கடலைப்பருப்பு, வர மிளகாய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைத்து கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் இதை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான தக்காளி, கடலைப்பருப்பு சட்னி ரெடி



Click it and Unblock the Notifications