Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
Thaipusam 2026: தைப்பூசம் நாளில் இந்த திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Thaipusam 2026: முருகனுக்கு உகந்த தைப்பூசம் வருகிற பிப்ரவரி 01 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் முருகப்பெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக முருகனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து பிரசாதமாக படைத்து வழிபடுவார்கள்.
நீங்கள் இந்த தைப்பூசம் நாளில் முருகனுக்கு பிடித்ததை செய்து படைத்து வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்கள். இந்த திருப்பாகம் செய்வது மிகவும் சுலபம். இதை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம். ஒருமுறை இந்த திருப்பாகத்தை வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 50 கிராம்
* கடலை மாவு - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
* நெய் - 1/2 கப் (50-100 மிலி)
* சர்க்கரை - 100 கிராம்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரியை மிக்சர் ஜாரில் போட்டு, விட்டு விட்டு
அரைத்து மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை எடுத்து, அதில் கடலை மாவை சலித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொஞ்சம்
கொஞ்சமாக 50-100 மிலி நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு அல்வா போன்ற பதத்திற்கு திரண்டு வந்து, நெய்
பிரிந்து வரும் போது, அதை இறக்கினால், சுவையான திருச்செந்தூர் ஸ்பெஷல்
திருப்பாகம் தயார்.



Click it and Unblock the Notifications