Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
Thaipusam 2026: தைப்பூசம் நாளில் இந்த திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Thaipusam 2026: முருகனுக்கு உகந்த தைப்பூசம் வருகிற பிப்ரவரி 01 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் முருகப்பெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக முருகனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து பிரசாதமாக படைத்து வழிபடுவார்கள்.
நீங்கள் இந்த தைப்பூசம் நாளில் முருகனுக்கு பிடித்ததை செய்து படைத்து வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்கள். இந்த திருப்பாகம் செய்வது மிகவும் சுலபம். இதை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம். ஒருமுறை இந்த திருப்பாகத்தை வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 50 கிராம்
* கடலை மாவு - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
* நெய் - 1/2 கப் (50-100 மிலி)
* சர்க்கரை - 100 கிராம்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரியை மிக்சர் ஜாரில் போட்டு, விட்டு விட்டு
அரைத்து மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை எடுத்து, அதில் கடலை மாவை சலித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொஞ்சம்
கொஞ்சமாக 50-100 மிலி நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு அல்வா போன்ற பதத்திற்கு திரண்டு வந்து, நெய்
பிரிந்து வரும் போது, அதை இறக்கினால், சுவையான திருச்செந்தூர் ஸ்பெஷல்
திருப்பாகம் தயார்.



Click it and Unblock the Notifications









