Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஈவ்னிங் டைம்-ல டக்குன்னு டீ கடை இனிப்பு போண்டாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Tea Kadai Sweet Bonda Recipe: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒருமுறை டீ கடை இனிப்பு போண்டாவை செய்யுங்கள். இந்த டீ கடை இனிப்பு போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு டீ கடை இனிப்பு போண்டாவை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீ கடை இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ரவை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் ரவை மற்றும் 1/2 கப் சர்க்கரையை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற
வைப்பதன் மூலம், ரவை நன்கு ஊறியிருக்கும். இதனால் போண்டாவும் நன்கு
மென்மையாக இருக்கும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஆப்ப சோடா
சேர்க்க வேண்டாம் என்றால், இந்த கலவையை 1 மணிநேரம் ஊற வையுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு சிறு
கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். உடனே உடனே மாவை
ஊற்றாமல், மாவு நன்கு உப்பி போண்டா போன்று வந்த பின் அடுத்த கரண்டியை
விடுங்கள். இப்படி அனைத்து மாவையும் போண்டாக்களாக சுட்டு எடுத்தால்,
டீ கடை இனிப்பு போண்டா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications