Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஈவ்னிங் டைம்-ல டக்குன்னு டீ கடை இனிப்பு போண்டாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Tea Kadai Sweet Bonda Recipe: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒருமுறை டீ கடை இனிப்பு போண்டாவை செய்யுங்கள். இந்த டீ கடை இனிப்பு போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு டீ கடை இனிப்பு போண்டாவை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீ கடை இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* ரவை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 1/2 கப் ரவை மற்றும் 1/2 கப் சர்க்கரையை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற
வைப்பதன் மூலம், ரவை நன்கு ஊறியிருக்கும். இதனால் போண்டாவும் நன்கு
மென்மையாக இருக்கும்.
* 1/2 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் 1 சிட்டிகை ஆப்ப
சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஆப்ப சோடா
சேர்க்க வேண்டாம் என்றால், இந்த கலவையை 1 மணிநேரம் ஊற வையுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு சிறு
கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். உடனே உடனே மாவை
ஊற்றாமல், மாவு நன்கு உப்பி போண்டா போன்று வந்த பின் அடுத்த கரண்டியை
விடுங்கள். இப்படி அனைத்து மாவையும் போண்டாக்களாக சுட்டு எடுத்தால்,
டீ கடை இனிப்பு போண்டா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











