Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மரவள்ளிக்கிழங்கு வாங்குனா.. இப்படி ஈவ்னிங் டைம்-ல செய்யுங்க.. பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க..
Maravalli Kizhangu Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மரவள்ளிக் கிழங்கு உள்ளதா? ஆனால் அதை உங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு அந்த மரவள்ளிக்கிழங்கு கொண்டு இனிப்பு பணியாரம் போன்று செய்து கொடுங்கள்.
இப்படி செய்யும் போது, மரவள்ளிக்கிழங்கு சாப்பிடாத குழந்தைகளும், அதை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். மரவள்ளிக்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது. இதை அடிக்கடி குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக மாலை வேளையில் இப்படி சத்தான பொருளை வித்தியாசமாக செய்து கொடுக்கும் போது, அவர்களின் பசியும் தணியும், ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4
* தேங்காய் - 1/2 மூடி
* சர்க்கரை - 50 கிராம்
* மைதா மாவு - 1 கப்
* இட்லி மாவு - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவியதை இட்லி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தினுள்
வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை போட்டு,
அத்துடன் 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள், துருவிய 1/2 மூடி தேங்காய்
மற்றும் சர்க்கரையை சேர்த்து, கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பிறகு கிழங்கானது ஓரளவு ஆறியதும், அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து, அத்துடன் இட்லி மாவு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள
வேண்டும்.
* அதன் பின் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெய்
அல்லது நெய்யை சிறிது ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து மைதா மாவு கலவையில் பிரட்டி,
பணியாரக் குழிகளில் போட்டு, நன்கு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால்,
சுவையான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications