Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
திணை பாயாசம்
தானியங்களுள் ஒன்று தான் திணை. இத்தகைய திணையை பலர் உப்புமா செய்து தான் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் அந்த திணையைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த திணை பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
திணை - 1/2 கப்
வெல்லம் - 3/4 கப்
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/2 கப்
நெய் - 1 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், திணையை சேர்த்து பொன்னிறமாகவும், நன்கு மணம் வரும் வரை வறுத்து, பின் அதில் நீரை ஊற்றி, மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி கரண்டி பயன்படுத்தி வெல்லத்தை கரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். நீரானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வேக வைத்துள்ள திணையை சேர்த்து கட்டி சேராதவாறு 3 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் ஏலக்காய் பொடி, பால் சேர்த்து கிளறி, பின் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், திணை பாயாசம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications