Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்: தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
வரலட்சுமி நோன்பிற்கு கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். அப்படி செய்யும் செய்யும் கொழுக்கட்டைகளில் ஒன்று தான் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் ஈஸி. நீங்கள் இந்த கொழுக்கட்டையை செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு இந்த தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டையானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து தண்ணீர் சற்று கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை வதக்க வேண்டும்.
பின்பு வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வறுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய் பொடி தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அந்த தேங்காய் கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி, சுடுநீர் மெதுவாக ஊற்றிக் கொண்டே கரண்டியால் கிளறி, வெதுவெதுப்பாகும் வரை 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சிறிது நேரம் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் கைகளில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் உருண்டையை வைத்து, கூம்பு வடிவில் அல்லது பிடித்த வடிவில் கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் இட்லி பாத்திரத்தில், அந்த கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து இறக்கினால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications