Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன?
வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்: தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
வரலட்சுமி நோன்பிற்கு கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். அப்படி செய்யும் செய்யும் கொழுக்கட்டைகளில் ஒன்று தான் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் ஈஸி. நீங்கள் இந்த கொழுக்கட்டையை செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு இந்த தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டையானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து தண்ணீர் சற்று கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை வதக்க வேண்டும்.
பின்பு வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வறுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய் பொடி தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அந்த தேங்காய் கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி, சுடுநீர் மெதுவாக ஊற்றிக் கொண்டே கரண்டியால் கிளறி, வெதுவெதுப்பாகும் வரை 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சிறிது நேரம் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் கைகளில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் உருண்டையை வைத்து, கூம்பு வடிவில் அல்லது பிடித்த வடிவில் கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் இட்லி பாத்திரத்தில், அந்த கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து இறக்கினால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications