Just In
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கோபப்பட்டா பிரச்சனையை சந்திப்பாங்களாம்…
- 17 hrs ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 17 hrs ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
- 19 hrs ago
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Don't Miss
- Automobiles
பாலிவுட் திரையுலகில் லம்போர்கினி உருஸ் சொகுசு காருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு... அட இவரும் வாங்கிட்டாரா!!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி.. தீயாய் பரவும் தகவல்!
- News
Exclusive: சாலை வரி கட்டிய பேருந்துகளை.. சும்மா நிறுத்த முடியாது.. பர்வீன் டிராவல்ஸ் அதிபர் விளக்கம்
- Sports
இதுதாங்க கடைசி.. விட்டு பிடிக்கும் கோச் பிளமிங்.. சிஎஸ்கேவில் மீண்டும் "அந்த" வீரர்.. என்ன நடந்தது?
- Finance
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி சரிவு.. லாக்டவுன் மூலம் கடும் பாதிப்பு..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரலட்சுமி நோன்பு ஸ்பெஷல்: தேங்காய் பூர்ண கொழுக்கட்டை
வரலட்சுமி நோன்பிற்கு கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். அப்படி செய்யும் செய்யும் கொழுக்கட்டைகளில் ஒன்று தான் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் ஈஸி. நீங்கள் இந்த கொழுக்கட்டையை செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு இந்த தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டையானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து தண்ணீர் சற்று கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை வதக்க வேண்டும்.
பின்பு வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வறுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய் பொடி தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அந்த தேங்காய் கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி, சுடுநீர் மெதுவாக ஊற்றிக் கொண்டே கரண்டியால் கிளறி, வெதுவெதுப்பாகும் வரை 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சிறிது நேரம் தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் கைகளில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் உருண்டையை வைத்து, கூம்பு வடிவில் அல்லது பிடித்த வடிவில் கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் இட்லி பாத்திரத்தில், அந்த கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து இறக்கினால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
Image Courtesy: sharmispassions