Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒர அருமையான முறையில் சுதந்திர தின வாழ்த்துக்களை வீட்டில் உள்ளோருக்கும், விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். அது வேறொன்றும் இல்லை. பொதுவாக பெண்களுக்கு சமையல் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அத்தகைய சமையல் மூலமாகவே, சூப்பரான ஒரு டிஷ் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், நமது இந்திய தேசியக் கொடியை மையமாக வைத்து செய்யப்படுவது தான். ஆம், எப்படி இந்திய தேசியக் கொடியில் பச்சை, வெள்ளை, ஆரஞ்சு நிறங்கள் உள்ளதோ, அதேப் போன்றே இந்த ரெசிபியும் இருக்கும். சரி, இப்போது அந்த சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சை நிற லேயருக்கு...
அரைத்த கிவி பழம் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
ஜெல்லடின் (Gelatin) - 2 டீஸ்பூன்
வெள்ளை நிற லேயருக்கு...
க்ரீம் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஜெல்லடின் (Gelatin) - 2 டீஸ்பூன்
ஆரஞ்சு நிற லேயருக்கு...
நன்கு அடித்த க்ரீம் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
மாம்பழ கூழ் - 1 கப்
ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை

பச்சை நிற லேயரின் செய்முறை:
முதலில் ஜெல்லடினை 1/4 கப் தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பேனில் அரைத்த கிவி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
கலவையானது சூடானதும், அதில் ஜெல்லடினை ஊற்றி, அடுப்பில் இருந்து இறக்கி நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி 5-6 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இதனால் அது ஜெல் போன்று ஆகிவிடும்.

வெள்ளை நிற லேயரின் செய்முறை:
இந்த லேயருக்கும் ஜெல்லடினை 1/4 கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலந்து, அடுப்பில் இருந்து இறக்கி, அதில் ஜெல்லடினை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதனை மற்றொரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, 5-6 மணிநேரம் ப்ரீசரில் வைக்க வேண்டும். இதனால் அதுவும் ஜெல் போன்றாகிவிடும்.

ஆரஞ்சு நிற லேயரின் செய்முறை:
நன்கு அடித்து வைத்துள்ள க்ரீம்மில் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் மாம்பழ கூழை ஊற்றி, கேசரி பவுடர் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ளவும்.
பிறகு அதனையும் மற்றொரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, 2-3 மணிநேரம் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.

அலங்கரிப்பு...
மேற்கூறியவாறெல்லாம் செய்த பின்னர், சுதந்திர தினத்தன்று வீட்டில் உள்ளோருக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ, அழகான கண்ணாடி டம்ளரில் முதலில் பச்சை நிற ஜெல்லியைப் போட்டு, பின் வெள்ளை நிறத்தை போட்டு, இறுதியில் ஆரஞ்சு நிற கலவையைப் போட்டு கொடுத்து, சுதந்திர தின வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவிக்கலாம்.
Image Courtesy : Neha Mathur



Click it and Unblock the Notifications