Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தீபாவளி ஸ்பெஷல் ஜவ்வரிசி பாயாசம்
தீபாவளிக்கு மதிய வேளையில் வடை பாயாசத்துடன் சமைக்கும் போது, அப்போது சேமியா பாயசம் செய்வதற்கு பதிலாக, ஜவ்வரிசி கொண்டு பாயாசம் செய்தால், அது வித்தியாசமானதாக இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஏனெனில் ஜவ்வரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளது. ஆகவே இந்த வருட தீபாவளிக்கு ஜவ்வரிசி பாயாசம் செய்து மகிழுங்கள்.
இப்போது அந்த ஜவ்வரிசி பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி
-
1/3
கப்
சர்க்கரை
-
1/4
கப்
பால்
-
5
கப்
முந்திரி
-
6-8
(நறுக்கியது)
பாதாம்
-
5
குங்குமப்பூ
-
சிறிது
ஏலக்காய்
பொடி
-
1/4
டீஸ்பூன்
நெய்
-
1
டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் போட்டு, நன்கு பெரியதாகும் வரை, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குங்குமப்பூவை 1 டேபிள் ஸ்பூன் பாலில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து பாலை ஓரளவு சுண்ட வைக்க வேண்டும்.
பின் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, ஜவ்வரிசி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
ஜவ்வரியானது நன்கு வெந்ததும், ஊற வைத்துள்ள குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.
பின் அதில் நட்ஸ், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி!!!