Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வரலட்சுமி ஸ்பெஷல் ரெசிபி: கேரட் பாயாசம்
வரலட்சுமி பூஜைக்கு நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்போம். அதிலும் விஷேசம் என்றால், அனைவரது வீட்டில் நிச்சயம் பாயாசம் செய்வோம். அந்த பாயாசத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் இப்போது சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ஒரு பாயாசத்தைப் பார்க்கப் போகிறோம்.
அது என்னவென்றால், கேரட் கொண்டு செய்யப்படும் பாயாசம். இந்த பாயாசத்தின் சுவை வித்தியாசமானதாகவும், அதே சமயம் மிகுந்த சுவையுடனும் இருக்கும். இப்போது அந்த கேரட் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கேரட் - 2 (பெரியது)
சேமியா - 2-3 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/4 கப்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
பிஸ்தா/முந்திரி - 3-4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
முதலில் கேரட்டின் தோலை சீவி விட்டு, நறுக்கி நீரில் போட்டு நன்கு மென்மையாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, வேக வைத்த தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, பாலானது கொதிக்கும் போது, அதில் சேமியாவைப் போட்டு, 3 நிமிடம் வேக வைத்து, பிறகு அரைத்து வைத்திருக்கும் கேரட்டை போட்டு கிளறி விட வேண்டும்.
அடுத்து கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பிஸ்தா/முந்திரி சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கினால், சுவையான கேரட் பாயாசம் ரெடி!!! விருப்பப்பட்டால் இதன்மேல் சிறிது உலர் திராட்சையை தூவி அலங்கரித்தும் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications











