Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
உகாதி ஸ்பெஷல்: அதிரசம்
உகாதி பண்டிகையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு புத்தாண்டு என்பதால், பலர் புத்தாண்டை வரவேற்பதற்கு இனிப்புக்களை செய்வார்கள். பெரும்பாலும் உகாதி பண்டிகையன்று அதிரசம் தான் செய்வார்கள். அத்தகைய அதிரசத்தை எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதனைப் படித்து பார்த்து, வீட்டில் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இதனை செய்வது மிகவும் ஈஸி. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கிலோ
எள் - 1/4 கப்
வெல்லம் - 3/4 கிலோ (தட்டியது)
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, அதனை ஒரு துணியில் போட்டு நன்கு பரப்பி உலர வைக்க வேண்டும்.
அரிசியானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத்தைப் போட்டு உருக வைத்து, சிரப்பானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் பொடித்த அரிசியை கெட்டி சேராதவாறு மெதுவாக சேர்த்து நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.
பின் கையில் ஒரு பிளாஸ்டிக் க்ளவுஸ் போட்டு, இறக்கி வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து பின் அதனை தட்டையாக தட்டி, எள்ளில் போட்டு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அதிரசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications