Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
உகாதி ஸ்பெஷல்: அதிரசம்
உகாதி பண்டிகையானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு புத்தாண்டு என்பதால், பலர் புத்தாண்டை வரவேற்பதற்கு இனிப்புக்களை செய்வார்கள். பெரும்பாலும் உகாதி பண்டிகையன்று அதிரசம் தான் செய்வார்கள். அத்தகைய அதிரசத்தை எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதனைப் படித்து பார்த்து, வீட்டில் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இதனை செய்வது மிகவும் ஈஸி. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கிலோ
எள் - 1/4 கப்
வெல்லம் - 3/4 கிலோ (தட்டியது)
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, அதனை ஒரு துணியில் போட்டு நன்கு பரப்பி உலர வைக்க வேண்டும்.
அரிசியானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத்தைப் போட்டு உருக வைத்து, சிரப்பானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் பொடித்த அரிசியை கெட்டி சேராதவாறு மெதுவாக சேர்த்து நன்கு கிளறி, இறக்கி விட வேண்டும்.
பின் கையில் ஒரு பிளாஸ்டிக் க்ளவுஸ் போட்டு, இறக்கி வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து பின் அதனை தட்டையாக தட்டி, எள்ளில் போட்டு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அதிரசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
