Latest Updates
-
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்...
ஆடி வெள்ளி ஸ்பெஷல்: தேங்காய் பாயாசம்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளையில் பெரும்பாலான வீடுகளில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை என்றால் சொல்லவா வேண்டும். அந்நாளன்று வீடே மங்களகரமாக, நறுமணத்துடன் கமகமவென்று இருக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த ஆடி வெள்ளிக்கு மதியம் என்ன பாயாசம் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், தேங்காய் பாயாசம் செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மிகுந்த சுவையைக் கொண்டதும் கூட. சரி, இப்போது அந்த தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு வைத்து, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications











