Just In
- 2 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 6 hrs ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
- 7 hrs ago 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
Don't Miss
- News ‛அரசியலை விட்டு போகிறேன்’.. சசிகலா காலில் விழுந்த எடப்பாடியின் போட்டோ காட்டி சவால்விடுத்த உதயநிதி
- Automobiles ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
ஆடி வெள்ளி ஸ்பெஷல்: தேங்காய் பாயாசம்
பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மதிய வேளையில் பெரும்பாலான வீடுகளில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை என்றால் சொல்லவா வேண்டும். அந்நாளன்று வீடே மங்களகரமாக, நறுமணத்துடன் கமகமவென்று இருக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த ஆடி வெள்ளிக்கு மதியம் என்ன பாயாசம் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், தேங்காய் பாயாசம் செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மிகுந்த சுவையைக் கொண்டதும் கூட. சரி, இப்போது அந்த தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
துருவிய
தேங்காய்
-
3/4
கப்
பச்சரிசி
-
3
டேபிள்
ஸ்பூன்
வெல்லம்
-
3/4
கப்
ஏலக்காய்
-
1
முந்திரி
-
8-10
காய்ச்சி
குளிர
வைத்த
பால்
-
1/4
கப்
நெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு வைத்து, வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் உள்ள பச்சரிசி கலவையானது ஓரளவு கெட்டியாக கஞ்சி போன்று வரும் போது, அதில் வெல்லப் பாகுவை ஊற்றி, பின் அதில் ஏலக்காயை நன்கு தட்டிப் போட்டு கிளறி, கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்துடன் ஊற்றி கிளறி, 5 நிமிடம் கழித்து அதில் பாலை ஊற்றி கிளறினால், தேங்காய் பாயாசம் ரெடி!!!
Image Courtesy: rakskitchen