Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
தேங்காய் போளி

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அத்துடன் கேசரி பவுடர், உப்பு, நல்லெண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காயை துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைக்கவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லமானது நன்கு கரைந்து ஒன்று சேர்ந்ததும், அதனை இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஏலக்காய் பொடியையும் போட்டு பிசைந்து, பூரணத்தை செய்து கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு பூரணத்தையும் சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பின் ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து அதில் நல்லெண்ணெயை தடவி, மைதா உருண்டையை வைத்து வட்டமாக கையால் செய்யவும். பிறகு அதன் மேல் பூரண உருண்டையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும். பிறகு அதனை வட்டமாக போளி போல் தட்டவும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி தட்டி வைத்துள்ள போளியைப் போடவும். இவ்வாறு இரு பக்கமும் நெய்யைத் தடவி, கேஸை சிம்மில் வைத்து வேக விட்டு எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான, இனிப்பான தேங்காய் போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications











