Latest Updates
-
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா?
தேங்காய் போளி

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 1 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அத்துடன் கேசரி பவுடர், உப்பு, நல்லெண்ணெய் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காயை துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைக்கவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும். வெல்லமானது நன்கு கரைந்து ஒன்று சேர்ந்ததும், அதனை இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஏலக்காய் பொடியையும் போட்டு பிசைந்து, பூரணத்தை செய்து கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு பூரணத்தையும் சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பின் ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து அதில் நல்லெண்ணெயை தடவி, மைதா உருண்டையை வைத்து வட்டமாக கையால் செய்யவும். பிறகு அதன் மேல் பூரண உருண்டையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும். பிறகு அதனை வட்டமாக போளி போல் தட்டவும்.
பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி தட்டி வைத்துள்ள போளியைப் போடவும். இவ்வாறு இரு பக்கமும் நெய்யைத் தடவி, கேஸை சிம்மில் வைத்து வேக விட்டு எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான, இனிப்பான தேங்காய் போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications