Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா?
Chef Madhampatty Rangaraj's Style Masala Buttermilk Soda Recipe: கோடை வெயில் கொளுத்தும் போது, உடலுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் மோர் குடித்தால் நன்றாக இருக்கும். அதுவும் இப்படி கொளுத்தும் வெயில் நேரத்தில் மோர் குடிக்கும் போது, பல நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, உடலும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த மோரை எப்போதும் வெறுமனே குடிப்பதற்கு பதிலாக, அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை அரைத்து சேர்த்து குடித்தால் இன்னும் ருசியாக இருக்கும். அதோடு இப்படி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் எக்ஸ்ட்ரா ஒரு டம்ளர் மோரை குடிக்கவும் செய்வார்கள்.

ஆனால் இதை விட, பிரபல செஃப்பான மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு கோடைக்கு ஏற்ற அற்புதமான மசாலா மோர் சோடா ரெசிபியை பகிர்ந்துள்ளார். இந்த மசாலா மோர் சோடா கேரளாவில் பிரபலமானது. இதை வயிறு நிறைய உண்ட பின் குடிக்கும் போது செரிமானம் சிறப்பாக இருக்கும். மேலும் கோடை வெயிலுக்கு உடலுக்கு இதமாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த மசாலா மோர் சோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா மோர் சோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மலை நெல்லிக்காய் - 2
* கோ மாங்காய் - 4 நீளத் துண்டுகள்
* பச்சை மிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - சிறிய துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/2 லிட்டர்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஐஸ் கட்டிகள் - சிறிது
* சோடா - சிறிது
செய்முறை:
* முதலில் மலை நெல்லிக்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் கோ மாங்காயை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய மலை நெல்லிக்காய், மாங்காய், 1
பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து பெரிய மிக்சர் ஜாரில் அரைத்த விழுதை எடுத்துக் கொண்டு,
அத்துடன் 1/2 லிட்டர் தயிரை சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூளையும்
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு டம்ளரில் அரைத்த மோரை பாதி ஊற்றி, அதில் சிறிது ஐஸ்
துண்டுகளை சேர்த்து, சிறிது சோடாவை சேர்த்து கலந்தால், சுவையான மசாலா
மோர் சோடா தயார்.



Click it and Unblock the Notifications