Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கொளுத்துற வெயிலுக்கு குளுகுளு-ன்னு இந்த மாதிரி மோர் செஞ்சு குடிங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Summer Special Manga Masala Mor Recipe In Tamil: தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் வகையில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலில் நீர்ச்சத்தானது வியர்வை வழியாக வெளியேறி, நிறைய தாகத்தை சந்திக்க நேரிடும். இந்நிலையில் எப்போதும் வெறும் தண்ணீரைக் குடிக்க பிடிக்காமல், சிலர் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடிப்பார்கள்.
ஆனால் இப்படி செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டு விற்கப்படும் கூல்ட்ரிங்க்குகளை குடித்தால், தற்காலிகமாக தாகம் அடங்கினாலும், உடலில் நீரிழப்பு தான் ஏற்படும். இப்படிப்பட்ட நேரத்தில் தயிர் கொண்டு மோர் தயாரித்து குடித்தால், தாகம் அடங்குவதோடு, உடலும் குளிர்ச்சியாக இருக்கும். அதுவும் வெறும் மோரை செய்து குடிக்காமல், மசாலா மோர் செய்து குடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பாக அந்த மசாலா மோருடன் சில துண்டுகள் மாங்காயை சேர்க்கும் போது, சுவை இன்னும் வேற லெவலில் இருக்கும். எனவே அடுத்தமுறை மோர் செய்வதாக இருந்தால், இந்த மாங்காய் மசாலா மோரை செய்து குடியுங்கள். இப்படி மோர் செய்யும் போது, மோர் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மாங்கா மசாலா மோரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாங்கா மசாலா மோர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கிளி மூக்கு மாங்காய் - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரஷ்ஷான கெட்டித் தயிர் - தேவையான அளவு
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சற்று புளிப்பான கிளி மூக்கு மாங்காயை துண்டுகளாக்கி ஒரு
கையளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட மாங்காயை சேர்த்து,
அத்துடன் 1 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி, 1 கொத்து கறிவேப்பிலையை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது பிரஷ்ஷான கெட்டித் தயிரை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் எவ்வளவு மோர் வேண்டுமோ அந்த அளவு தயிரை சேர்த்து,
அத்துடன் ஐஸ் தண்ணீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மோரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மோருடன் ஊற்றி
கிளறினால், சுவையான மாங்கா மசாலா மோர் தயார்.



Click it and Unblock the Notifications











