Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மலபார் ஸ்பெஷல்: சுலைமணி டீ
கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ. இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது.
மாலை வேளையில் சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரளாவின் மலபார் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா டீ உள்ளது. அதன் பெயர் சுலைமணி டீ. இந்த சுலைமணி டீ அரபு பாரம்பரியத்திலிருந்து உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த டீயை மலபாரில் உள்ள மக்கள் பிரியாணி சாப்பிட்ட பிறகு குடிப்பார்கள். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதோடு உடலில் உள்ள கொழுப்புக்களையும் குறைக்க வல்லது.
உங்களுக்கு மலபார் ஸ்பெஷல் சுலைமணி டீ எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த சுலைமணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 கப்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/4 இன்ச்
* ஏலக்காய் - 2
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* டீ தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - விருப்பமிருந்தால் சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.
* பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* இறுதியாக, அதை வடிகட்டினால், சுவையான சுலைமணி டீ தயார்.
குறிப்பு:
* இந்த டீ தயாரிக்கும் போது, இனிப்பு சுவைக்கு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* டீ தூள் சேர்க்க விருப்பமில்லாதவர்கள், அதைத் தவிர்க்கலாம்.
Image Courtesy: sharmispassions