Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் கிடைக்கும் அக்காரவடிசல் செய்ய தெரியுமா?
திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம் போல திருச்சி ஸ்ரீரங்கத்தில் அக்காரவடிசல் பிரசாதம் ரொம்பவே ஸ்பெஷல்.. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் அக்காரவடிசல் பிரதானமான ஒன்று. ஸ்ரீரங்கம் மட்டுமல்ல திருச்சியில் உள்ள பல கோயில்களில் இந்த அக்காரவடிசல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அக்காரவாசலும் சர்க்கரை பொங்கலும் பார்ப்பதற்கு ஒன்று போலதான் தெரியும் ஆனால் இவை இரண்டுமே வெவ்வேறு. அக்காரவடிசலை முழுக்க முழுக்க பாலில்தான் செய்வார்கள்.. மிக முக்கியமாக இதை புது அரிசியில்தான் செய்வார்கள்.. அப்போதுதான் நன்றாக குழைந்து வரும்.. இதன் சுவை சும்மா சூப்பராக இருக்கும்.. வாங்க இதை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்
1. பச்சரிசி - 2 கப்
2. பாசிப்பருப்பு - 1 கப்
3. வெல்லம் - 6 கப்
4. பால் - 12 கப்
5. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை,
6. ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்
7. முந்திரி - ஒரு கைப்பிடி
8. உலர் திராட்சை - 1 கைப்பிடி
9. நெய் - 250 மில்லி
செய்முறை
1. முதலில் நீங்கள் செய்யும் அளவிற்கு ஏற்ப புது அரிசியை எடுத்துக் கொள்ளவேண்டும்.. அதன் பிறகு, பாசி பருப்பு, தண்ணீர், பால் ஊற்றி குக்கரில் நான்கு விசில் அடிக்கும் வரை வேக வைக்க வேண்டும்..
2. அரிசி பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து குழைந்துவிடும்.
இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரில் வேக வைத்த
சாதத்தை போடவும்.
3. இதிலும் கால் லிட்டர் பால் ஊற்றுங்கள். இப்போது வேக வைத்த சாதத்தை பாலில் கொதிக்க விடவும்..
4. இதன் பிறகு கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டு கலந்து விடுங்கள்.
5. இப்போது 300 கிராம் வெல்லத்தை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்..பின்னர் அதை இந்த கலவையுடன் சேருங்கள்.. அக்காரவடிசலின் நிறம் முற்றிலுமாக மாறும். ஒரு சிட்டிகை உப்பு போடுங்கள்.
6. அடுத்ததாக 100 மில்லி லிட்டர் நெய் ஊற்றவும். அது உருகிய பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
7. இதை அப்படியே நெய், பாலில் வேகும் சாதத்தின் மீது
ஊற்றுங்கள்.
நெய் நன்றாக கலந்து கண்களில் தென்படாத வரை கிளறிக் கொண்டே
இருங்கள்.
இறுதியாக இன்னும் 100 மில்லி லிட்டர் நெய் சேர்த்து கலந்து ஐந்து
நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்போது சாமி பிரசாதமான
ஸ்ரீரங்காவின் அக்காரவடிசல் வீட்டிலேயே ரெடி..
8. இதை கண்டிப்பாக குழந்தைகளும் வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.. ட்ரை பண்ணுங்கள்..



Click it and Unblock the Notifications
