Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் கிடைக்கும் அக்காரவடிசல் செய்ய தெரியுமா?
திருப்பதியில் லட்டு, பழனியில் பஞ்சாமிர்தம் போல திருச்சி ஸ்ரீரங்கத்தில் அக்காரவடிசல் பிரசாதம் ரொம்பவே ஸ்பெஷல்.. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் அக்காரவடிசல் பிரதானமான ஒன்று. ஸ்ரீரங்கம் மட்டுமல்ல திருச்சியில் உள்ள பல கோயில்களில் இந்த அக்காரவடிசல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அக்காரவாசலும் சர்க்கரை பொங்கலும் பார்ப்பதற்கு ஒன்று போலதான் தெரியும் ஆனால் இவை இரண்டுமே வெவ்வேறு. அக்காரவடிசலை முழுக்க முழுக்க பாலில்தான் செய்வார்கள்.. மிக முக்கியமாக இதை புது அரிசியில்தான் செய்வார்கள்.. அப்போதுதான் நன்றாக குழைந்து வரும்.. இதன் சுவை சும்மா சூப்பராக இருக்கும்.. வாங்க இதை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்
1. பச்சரிசி - 2 கப்
2. பாசிப்பருப்பு - 1 கப்
3. வெல்லம் - 6 கப்
4. பால் - 12 கப்
5. பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை,
6. ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்
7. முந்திரி - ஒரு கைப்பிடி
8. உலர் திராட்சை - 1 கைப்பிடி
9. நெய் - 250 மில்லி
செய்முறை
1. முதலில் நீங்கள் செய்யும் அளவிற்கு ஏற்ப புது அரிசியை எடுத்துக் கொள்ளவேண்டும்.. அதன் பிறகு, பாசி பருப்பு, தண்ணீர், பால் ஊற்றி குக்கரில் நான்கு விசில் அடிக்கும் வரை வேக வைக்க வேண்டும்..
2. அரிசி பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து குழைந்துவிடும்.
இப்போது கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரில் வேக வைத்த
சாதத்தை போடவும்.
3. இதிலும் கால் லிட்டர் பால் ஊற்றுங்கள். இப்போது வேக வைத்த சாதத்தை பாலில் கொதிக்க விடவும்..
4. இதன் பிறகு கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டு கலந்து விடுங்கள்.
5. இப்போது 300 கிராம் வெல்லத்தை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்..பின்னர் அதை இந்த கலவையுடன் சேருங்கள்.. அக்காரவடிசலின் நிறம் முற்றிலுமாக மாறும். ஒரு சிட்டிகை உப்பு போடுங்கள்.
6. அடுத்ததாக 100 மில்லி லிட்டர் நெய் ஊற்றவும். அது உருகிய பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
7. இதை அப்படியே நெய், பாலில் வேகும் சாதத்தின் மீது
ஊற்றுங்கள்.
நெய் நன்றாக கலந்து கண்களில் தென்படாத வரை கிளறிக் கொண்டே
இருங்கள்.
இறுதியாக இன்னும் 100 மில்லி லிட்டர் நெய் சேர்த்து கலந்து ஐந்து
நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்போது சாமி பிரசாதமான
ஸ்ரீரங்காவின் அக்காரவடிசல் வீட்டிலேயே ரெடி..
8. இதை கண்டிப்பாக குழந்தைகளும் வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.. ட்ரை பண்ணுங்கள்..



Click it and Unblock the Notifications
