Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா? நவராத்திரி என்பதால் பலரும் மாலையில் பூஜை செய்யும் போது ஏதேனும் படையல் செய்வார்கள்.
இன்றைய பூஜைக்கு சற்று வித்தியாசமாக தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை செய்து படையுங்கள். இதை செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி - 1 கப்
துருவிய மாங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெள்ளை பட்டாணியை குறைந்தது 6-8 மணிநேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு தூவி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் வெள்ளை பட்டாணியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் துருவிய மாங்காய், தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தயார்!!!



Click it and Unblock the Notifications











