For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்கு இதமாக இருக்கும் இஞ்சி ஏலக்காய் டீ

By Maha
|

மழைப் பெய்யும் போது, சூடாக ஏதாவது வயிற்றினுள் சென்றால் நன்றாக இருக்குமென்று தோன்றும். ஒரு கப் சூடான டீ குடித்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். அதிலும் இஞ்சி, ஏலக்காய் தட்டிப் போட்டு டீ தயாரித்து குடித்தால், சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

இங்கு இஞ்சி ஏலக்காய் டீயை எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து மாலையில் மழை பெய்யும் போது செய்து குடித்து மகிழுங்கள்.

Ginger & Cardamom Tea

தேவையான பொருட்கள்:

பால் - 2 டம்ளர்
தண்ணீர் - 1/2 டம்ளர்
சர்க்கரை - தேவையான அளவு
டீ பவுடர் - தேவையான அளவு
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
ஏலக்காய் - 2 (தட்டியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, டீ பவுடர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நன்கு கொதித்த பின், 2 நிமிடம் மிதமான தீயில் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், இஞ்சி ஏலக்காய் டீ தயார்!

English summary

Ginger & Cardamom Tea

Do you know how to prepare ginger and cardamom tea? Check out and give it a try...
Desktop Bottom Promotion