Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
காளான் பஜ்ஜி
அசைவ உணவுகளுக்கு இணையான சுவையைத் தரக்கூடியது தான் காளான். இந்த காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி.
இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைதா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அந்த நீரில் காளானை போட்டு 2 நிமிடம் ஊற வைத்து அலசி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
காளானில் உள்ள நீர் முற்றிலும் வற்றிய பின், ஒரு பௌலில் மைதா, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து காளானையும் பொரித்து எடுத்தால், காளான் பஜ்ஜி ரெடி!!!
Image Courtesy: kumariskitchen



Click it and Unblock the Notifications