Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை
நவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதுடன், கொழு பொம்மைகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் என்ன ரெசிபி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதற்கு பெயர் ஜவ்வரிசி வடை. இந்த வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications











