Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை
நவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பதுடன், கொழு பொம்மைகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே சமயம் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் என்ன ரெசிபி செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
அதற்கு பெயர் ஜவ்வரிசி வடை. இந்த வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications











