Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
நீரிழிவு நோயாளிகளுக்கான... ப்ராக்கோலி சூப்
காலிஃப்ளவர் போன்று பச்சையாக இருப்பது தான் ப்ராக்கோலி. பலருக்கு இந்த ப்ராக்கோலியை எப்படி சமைப்பதென்றே தெரியாது. ஆனால் இந்த ப்ராக்கோலியைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ராக்கோலி மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.
சரி, இப்போது அந்த ப்ராக்கோலியைக் கொண்டு எப்படி சூப் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 1/2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்
தண்ணீர் - 1/8 கப்
பால் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ப்ராக்கோலியை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, அதனை குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் அந்த குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, அதில் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரில் உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி சூப் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











