Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பாதாம் பூரி
குழந்தைகளுக்கு மாலையில் நல்ல சுவையான அதே சமயம் இனிப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பாதாம் பூரி செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பாதாம் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
பாதாம் - 1/2 கப் (பேஸ்ட்)
சர்க்கரை - 3 1/2 கப்
அரிசி மாவு - 1 1/4 கப்
பால் - 100 மிலி
குங்குமப்பூ - 1 கிராம்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
நெய் - 25 மிலி
எண்ணெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, பால் மற்றும் பாதாம் பேஸ்ட் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, அதில் குங்குமப்பூ, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து ஸ்பூன் கொண்டு கிளறி, சர்க்கரை பாகு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, பின் அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி தேய்க்கும் போது, ஒவ்வொன்றையும் முக்கோண வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அந்த பூரிகளை சர்க்கரை பாகுவில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறினால், பாதாம் பூரி ரெடி!!!



Click it and Unblock the Notifications