Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பாதாம் பூரி
குழந்தைகளுக்கு மாலையில் நல்ல சுவையான அதே சமயம் இனிப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பாதாம் பூரி செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பாதாம் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
பாதாம் - 1/2 கப் (பேஸ்ட்)
சர்க்கரை - 3 1/2 கப்
அரிசி மாவு - 1 1/4 கப்
பால் - 100 மிலி
குங்குமப்பூ - 1 கிராம்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
நெய் - 25 மிலி
எண்ணெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, பால் மற்றும் பாதாம் பேஸ்ட் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, அதில் குங்குமப்பூ, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து ஸ்பூன் கொண்டு கிளறி, சர்க்கரை பாகு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, பின் அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி தேய்க்கும் போது, ஒவ்வொன்றையும் முக்கோண வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அந்த பூரிகளை சர்க்கரை பாகுவில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறினால், பாதாம் பூரி ரெடி!!!



Click it and Unblock the Notifications











