Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
வெந்தயக்கீரை பக்கோடா
டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பது தெரியும். அந்த மாதத்தின் மாலை வேளையில் அடிக்கும் குளிருக்கு அளவே இருக்காது. அப்போது டீ அல்லது காபியுடன், ஏதேனும் மொறுமொறுவென்றும், நன்கு காரமாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பெரும்பாலும் பஜ்ஜி, வடை, பக்கோடா போன்றவற்றை செய்வோம். குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தான் இவற்றை செய்வோம்.
ஆனால் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் வெந்தயக்கீரை கொண்டு பக்கோடா செய்தால், உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதோடு, நல்ல சுவையான பக்கோடாவை சாப்பிட்டது போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த வெந்தயக்கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் சாதம், கடலை மாவு, வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மசிக்க வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக்கீரை பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications