Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
வெந்தயக்கீரை பக்கோடா
டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பது தெரியும். அந்த மாதத்தின் மாலை வேளையில் அடிக்கும் குளிருக்கு அளவே இருக்காது. அப்போது டீ அல்லது காபியுடன், ஏதேனும் மொறுமொறுவென்றும், நன்கு காரமாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பெரும்பாலும் பஜ்ஜி, வடை, பக்கோடா போன்றவற்றை செய்வோம். குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தான் இவற்றை செய்வோம்.
ஆனால் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் வெந்தயக்கீரை கொண்டு பக்கோடா செய்தால், உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதோடு, நல்ல சுவையான பக்கோடாவை சாப்பிட்டது போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த வெந்தயக்கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் சாதம், கடலை மாவு, வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மசிக்க வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக்கீரை பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications