Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
வெந்தயக்கீரை பக்கோடா
டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பது தெரியும். அந்த மாதத்தின் மாலை வேளையில் அடிக்கும் குளிருக்கு அளவே இருக்காது. அப்போது டீ அல்லது காபியுடன், ஏதேனும் மொறுமொறுவென்றும், நன்கு காரமாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பெரும்பாலும் பஜ்ஜி, வடை, பக்கோடா போன்றவற்றை செய்வோம். குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தான் இவற்றை செய்வோம்.
ஆனால் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் வெந்தயக்கீரை கொண்டு பக்கோடா செய்தால், உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதோடு, நல்ல சுவையான பக்கோடாவை சாப்பிட்டது போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த வெந்தயக்கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் சாதம், கடலை மாவு, வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மசிக்க வேண்டும்.
பின்பு அதனை சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெந்தயக்கீரை பக்கோடா ரெடி!!!



Click it and Unblock the Notifications











