Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Rice Pakora : சிம்பிளான.. அரிசி பக்கோடா
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சாதம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய அரிசி பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சாதம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய அரிசி பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த அரிசி பக்கோடாவை செய்வது சுலபம் மற்றும் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. அதோடு இந்த அரிசி பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு அரிசி பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரிசி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சாதம் - 2 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சாதத்தை மத்து கொண்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எண்ணெயைத் தவிர, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீர் தெளித்து கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை சிறு உருண்டை உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










